நானாக என்னில் நான்.......உள்ளது உள்ளபடி
நான் யார்? எங்கிருந்தோ வந்தேன்? எங்கே போகிறேன்? நான் என நான் நினைக்கும் நான் நானேதானா, யாரோதானா? நானும் அந்த யாரோவும் ஒன்றேதானா,வேறு வேறா? நாடகமே உலகம், நாமெல்லாம் அதில் நடிகர்கள் மாத்திரமே. நாடகம் முடிந்ததும் திரை விலகும், மேடை கலையும். நாடகம் பிறிதொரு மேடையில் பிறிதொரு களத்தில் தொடரும். இந்த நாடகமயமான உலகில் இந்த நான் யார்? அதைத்தேடி ஒரு பயணம்.
Friday, January 23, 2015
என் குடும்பப் பாரம்பரியம் (தாய்வழிக் கிளை உறவுகள்) (1)
என் குடும்பப் பாரம்பரியம் (தாய்வழிக் கிளை உறவுகள்) (1)
என்
குடும்பப் பாரம்பரியம் (கிளை
உறவுகள்) (2)
தாய்வழிக் கிளை உறவினர்கள்:
தாய்வழிக் கிளை உறவினர்கள்:
(3அ) சிவகாமுப் பாட்டி (அத்தைப்பாட்டி என்று அழைக்கப்பட்டவர்) இவர் விஸ்வனாத ஐயரின் சகோதரி. இவர்தம் கணவர் பெயர் விஸ்வனாத ஐயரோ வைத்தியனாத ஐயரோ சரியாகக் குறிப்பில்லை.
(4) வைத்திய நாத ஐயர் (தாய் வழி பெரிய தாத்தா). அவர்தம் வம்சாவழியினர் மன்னார்குடியில் பிறந்து வளர்ந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கிறார்கள்.
(4அ) வைத்தியனாதன் (எ) வைத்தி அண்ணா (எனக்கு). மனைவி பெயர் சாயா. அவர்தம் குழந்தைகள் ரமேஷ் என்கிற ராமதுரை (மகன்), மற்றும் ஜெயா என்கிற மகள்.
(4ஆ) நாராயணஸ்வாமி (எ) சாயி அண்ணா (எனக்கு). மனைவி பெயர் ஜானகி நாராயணஸ்வாமி. மனைவியின் பூர்வீகம் கும்பகோணம் மற்றும் தில்லி. பிற்காலத்தில் பெங்களூரிலேயே செட்டிலான குடும்பம் என்பது மட்டும் தெரியும்.
அவர்தம் குழந்தைகள் கீழே:
(4இ). கீதா நாராயணஸ்வாமி (முதல் பெண்) கணவர் பெயர் ஸ்ரீனிவாசன், குழந்தைகள் ஸ்ரீநிதி மற்றும் ஸ்ரீஹரி. கணவர் பூர்வீகம் தெரியாது, கோவையில் பிறந்து வளர்ந்திருக்கலாம்.
(4ஈ) சுஜாதா நாராயணஸ்வாமி (இரண்டாவது பெண்) கணவர் பெயர் சங்கர். குழந்தைகள் இருவர், பெயர் தெரியாது. கணவர் பூர்வீகம் தெரியாது, சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கலாம்.
(4உ) சங்கீதா நாராயணஸ்வாமி (மூன்றாவது பெண்) கணவர் ராஜு (எ) கோவிந்தராஜு. மைசூர் அல்லது திருச்சி பூர்வீகம் என்று அறிகிறேன், பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.
(4ஊ). ரஜினி நாராயணஸ்வாமி ( நான்காவது பெண், கடைக்குட்டி). கணவர் பெயர் ஜெய்சங்கர், திருச்சி பூர்வீகம் என்று அறிகிறேன்.
Subscribe to:
Posts (Atom)